சர்வமத கலந்துரையாடலுக்கான டோஹா மாநாடு கடந்த மே 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் இடம்பெற்றது. கட்டார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கான நிரந்தரக் குழு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வருட மாநாட்டில் 70 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றிருந்தனர்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பலஸ்தீனின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு
இவ்வருடத்துக்கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகவும், 68 ஹஜ் யாத்திரிகர்களுடன் இலங்கையிலிருந்து முதலாவது விமானம் எதிர்வரும் 21ஆம் திகதி புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்ஸார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இம்முறை ஹஜ் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளை உயரிய தரத்தில் வழங்குவதை உறுதி செய்யுமாறு இரு புனித தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் தொடர்பிலான பூரண விசாரணைகள், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.